மகிழ்ச்சியாக இல்லை என்றால் தயவுசெய்து வேலைக்கு வராதீர்கள் என்று சீன நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்வதற்காக சீனாவின் சில்லறை வர்த்தக அதிபர் ஒருவர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியற்ற விடுப்பு நாட்களை அறிமுகப்படுத்தினார். Pang Dong Lai- Yu Donglai இன் நிறுவனர் மற்றும் தலைவர்- ஊழியர்கள் 10 நாட்கள் கூடுதல் விடுப்புக்கு கோரலாம் என்று அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏனெனில் “எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நேரங்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம்” என்று கூறினார். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள் என்றும், இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது என்றும் நிறுவனர் கூறினார்.

நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் கொள்கையின்படி, பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். வார இறுதி விடுமுறை மற்றும் 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் சந்திர புத்தாண்டின் போது ஐந்து நாட்கள் விடுமுறைக்கு உரிமை உண்டு. 

இதுகுறித்து பேசிய அந்நிறுவன அதிபர், “எங்கள் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று விளக்கம் அளித்தார். இந்நிறுவனத்தின் முடிவுக்கு சீனர்கள் பலரும் ஆதரவை வழங்கியுள்ளனர். ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவித்த போது, “இதுபோன்ற ஒரு நல்ல முதலாளி மற்றும் இந்த நிறுவனத்தின் கலாச்சாரம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றார்.

மற்றொருவர், “நான் பாங் டாங் லாய் நிறுவனத்திற்கு மாற விரும்புகிறேன். நான் அங்கு மகிழ்ச்சியையும் மரியாதையையும் பெறுவேன் என்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!