அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

நிலநடுக்கத்தின் மையம் போர்ட் பிளேயருக்கு தென்கிழக்கே (SE) 126 கிமீ தொலைவில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் அருகே இன்று (சனிக்கிழமை) காலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏஜென்சியின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையம் போர்ட் பிளேயருக்கு தென்கிழக்கே (SE) 126 கிமீ தொலைவில் இருந்தது. நிலநடுக்கம் 12:53 AM IST க்கு பூமிக்கு அடியில் 69 கி.மீ.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி, நிலநடுக்கம் 69 கிமீ ஆழத்தில் இருந்தது மற்றும் 10.75 அட்சரேகை மற்றும் 93.47 தீர்க்கரேகையில் ஏற்பட்டது. இதற்கிடையில், புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தை (GFZ) மேற்கோள் காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், நிலநடுக்கம் 10 கிமீ ஆழம் மற்றும் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இருந்தது என்று குறிப்பிட்டது. நிலநடுக்கம் மற்றும் சேதாரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Scroll to load tweet…

Electric Scooters : ரூ.49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 3 வருட வாரண்டி - முழு விபரம் இதோ !!