Asianet News TamilAsianet News Tamil

‘சீனாவுக்கு நேரடி விமானம் கிடையாது.!’ வீதியில் நிற்கும் 23,000 இந்திய மாணவர்களின் கதி என்ன ?

கோவிட் 19 விதிகள் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமானங்கள் எதிர்காலத்தில் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

There is no direct flight to China, 23,000 Indian students are on the streets
Author
First Published Oct 11, 2022, 4:38 PM IST

சீன விமான நிலையங்களுக்குச் செல்லும் போது, சில பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்படும் ஒவ்வொரு முறையும் திட்டமிடப்பட்ட விமானங்களை திடீரென ரத்து செய்யும் கொள்கையை பெய்ஜிங் மாற்றியமைக்காவிட்டால், இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி பயணிகள் விமான சேவைகள் எதிர்காலத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் பதிவாகி உலகம் முழுவதும் பரவியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் தடைபட்டது. நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் சீனாவில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குடும்பங்கள் முன்னும் பின்னுமாக பயணிக்க விமானம் இடையூறு பெரும் பிரச்சனையாக மாறியது.

There is no direct flight to China, 23,000 Indian students are on the streets

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இருப்பினும் பெய்ஜிங் சமீபத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விசா தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து, சீனாவின் கோவிட் விசா தடைகளால் தாயகம் திரும்பிய மருத்துவம் படிக்கும் சுமார் 23,000 இந்திய மாணவர்கள், தங்கள் கல்லூரிகளில் மீண்டும் சேர்வதற்காக சீனாவுக்குச் செல்லத் தயாராகினர்.

ஆனால் நேரடி விமானங்கள் இல்லாததால் சிரமங்களை அனுபவித்தனர். பிற வழியில் சீனா செல்ல வேண்டும் என்றால், விமானங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இருப்பினும், 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சமீபத்திய வாரங்களில் குறிப்பாக ஹாங்காங் வழியாக சீனாவுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

விமானங்கள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், இந்தியாவிலிருந்து தினசரி இணைப்பைக் கொண்ட ஹாங்காங் வழியாக பயணிக்க இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் சீன நகரங்களுக்கு விமானத்தில் செல்லலாம். அங்கு அவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்திய பயணிகள் தற்போது இலங்கை, நேபாளம் மற்றும் மியான்மர் வழியாக சீனாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

அக்டோபர் 16 ஆம் தேதி இங்கு தொடங்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸுக்குப் பிறகும் சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. சமீபத்திய மாதங்களில், சீனா பெரும்பாலும் 2020 இல் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் விமானங்களை ரத்து செய்தது. சில நாடுகளில் இருந்து வரையறுக்கப்பட்ட விமான சேவைகளை அனுமதிக்கத் தொடங்கியது.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

There is no direct flight to China, 23,000 Indian students are on the streets

வரையறுக்கப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் கோவிட் பயணிகள் தொடர்பான விமான ரத்து விதிக்கு பெய்ஜிங்கின் வற்புறுத்தலின் காரணமாக பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேறவில்லை என்று கூறப்படுகிறது.

சீனாவுக்குப் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமான கோவிட் 19 சோதனைகளை நடத்துவது விமான நிறுவனங்கள் அல்ல என்பதால், விதிகளை கடைப்பிடிப்பது கடினம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தால் நியமிக்கப்பட்ட மையங்களில் கோவிட் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விமானத்தில் பயணிப்பதற்கான பச்சை குறியீடு சீன பணியால் வழங்கப்படுகிறது. இது இல்லாமல் பயணிகள் விமானத்தில் ஏற முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். பெய்ஜிங் விதியை ரத்து செய்யும் வரை இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை. இந்தப் பிரச்சினையால் 23000 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்த 23000 மாணவர்கள் நிலை என்ன ஆகுமோ என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

Follow Us:
Download App:
  • android
  • ios