Singapore Auxiliary Police Officers : சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) தங்கள் நாட்டிற்கு தேவையான துணை போலீஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் முறையை சற்று மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தங்கள் நாட்டில் குறைந்து வரும் பணியாளர்களின் அளவை கணக்கில் கொண்டு இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் இருந்து துணை போலீஸ் அதிகாரிகளை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இப்பொது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று ஜனவரி 10, 2024 அன்று அல்ஜூனிட் குழு பிரதிநிதித்துவ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் தாக்கல் செய்த நாடாளுமன்ற கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் மேற்குறிய இந்த தகவலை தெரிவித்தார். ஆனால் இது எப்போது செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. 

பிரபல OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் - மிக நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹரினை மணந்தார்!

துணை போலீஸ் அதிகாரிகள் என்றால் யார்?

துணைக் காவல் படைகளால் (APFs) பணியமர்த்தப்பட்ட துணைப் போலீஸ் அதிகாரிகள் (APOs) சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் சிங்கப்பூர்க் காவல் படைக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அங் மோ கியோ நார்த் நெய்பர்ஹூட் போலீஸ் சென்டரின் தகவல்படி, சிங்கப்பூரில் குறைந்து வரும் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் உடற்தகுதி காரணமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வணிக வங்கிகளின் ஆயுதமேந்திய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுப் புள்ளிகளில் பாதுகாப்புத் திரையிடல்களை நடத்துதல் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது கூட்டம் அல்லது போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் உதவுதல் ஆகியவை APOக்களால் மேற்கொள்ளப்படும் சில சாத்தியமான கடமைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சேர்ப்பு அதிகார வரம்புகளை விரிவாக்குவதற்கான காரணங்கள் என்ன?

அமைச்சர் சண்முகத்தின் கூற்றுப்படி, சிங்கப்பூர் "ஏபிஓ-க்களின் போதுமான தொகுப்பை" நிலைநிறுத்துவதில் சவால்களை எதிர்கொள்வதால், ஏபிஓக்களை ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய இடங்களை விரிவாக்குவது குறித்து MHA பரிசீலித்து வருகிறது என்றார். சுருங்கி வரும் உள்ளூர் பணியாளர்களின் அளவு, உடல் தகுதி போன்ற தேவைகள் மற்றும் சிங்கப்பூரர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் தான் இதற்குக் காரணம்.

பாதுகாப்பு சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, மலேசியா மற்றும் தைவானில் இருந்து APFகள் APOகளை ஆட்சேர்ப்பு செய்கின்றன. ஆனால் நவம்பர் 2023 நிலவரப்படி, மலேசியர்கள் மற்றும் தைவானிய APOக்கள் மொத்த APO மக்கள்தொகையில் தோராயமாக 32 சதவீதத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அது தொடர்ச்சியாக குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!