Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூர்.. உச்சத்தை எட்டிய பெருந்தொற்றின் தற்போதைய அலை.. முகமூடி அவசியமா? அமைச்சர் சொன்னதென்ன?

Singapore Covid 19 Wave Peaked : சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், இந்த பெருந்தொற்றின் அலை உச்சத்தை தொட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Singapore latest coivd 19 wave may peaked mask mandate not necessary says minister ong ye kung ans
Author
First Published Dec 23, 2023, 2:10 PM IST

சிங்கப்பூரில் கோவிட்-19 வழக்குகளின் அதிகரிப்பால் ஏற்பட்ட சமீபத்திய அலை உச்சத்தை எட்டியுள்ளது, மேலும் முகமூடி கட்டாயம், போன்ற கூடுதல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) அன்றி வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்தார்.

இருப்பினும், சுமார் 600 முதல் 700 மருத்துவமனை படுக்கைகளை COVID-19 நோயாளிகளால் நிரப்பப்படுவதால் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அமைச்சர் கூறினார். உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸின் திறப்பு விழாவில் பங்கேற்றபோது சிங்கப்பூரின் சுகாதார அமைச்சரான திரு. ஓங் இதனை குறிப்பிட்டார்.

அதே நேரம் எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் எங்கள் அமைப்பு மீது குறிப்பிடத்தக்க அளவில்  பணிச்சுமையை இந்த தொற்று அதிகரிப்பு ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். 10,000 படுக்கைகள் கொண்ட அமைப்பில் 600 முதல் 700 படுக்கைகள் என்பது குறைவான அளவு தான் என்றாலும், சுகாதார பணியாளர்களுக்கு அது சற்று சிரமங்களை ஏற்படுத்தும் என்றார் அவர். 

"தொற்று அதிகரித்து வரும்போது, கூடுதல் SMMகள் (பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள்) இல்லாமலேயே இதைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று எங்களின் மதிப்பீடு உள்ளது என்று நான் நினைக்கிறேன்," என்று திரு ஓங் கூறினார். கடந்த சில நாட்களாக மதிப்பிடப்பட்ட நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் திரு ஓங் கூறினார்.

வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை கொண்டு வரும் என்பதையும் சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டார். தொற்று அளவில் லேசான எழுச்சி இருக்கலாம் என்று கூறிய அவர், சிங்கப்பூரில் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 965 ஆக உயர்ந்துள்ளது, முந்தைய வாரத்தில் 763 ஆக இருந்தது, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios