Asianet News TamilAsianet News Tamil

செப்.27 ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார். 

pm modi visit japan to attend shinzo abes funeral nn sep 27
Author
First Published Sep 22, 2022, 7:09 PM IST

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா நகரில் பிரச்சார உரையின் போது படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, முன்னாள் பிரதமர் நோபுசுகே கிஷியின் பேரன் ஆவார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஆற்றிய உரையின் போது, மறைந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது குஜராத் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு அபேயின் வருகையை குஜராத் மக்கள் அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்... அறிவித்தது ராஜஸ்தான் அரசு!!

pm modi visit japan to attend shinzo abes funeral nn sep 27

ஜப்பானையும் இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள், அபேயால் செய்யப்பட்டவை, இப்போது தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவால் மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் ஷின்சோ அபே தனது பதவிக் காலம் முழுவதும் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். மேலும் அவர் அடிக்கடி இந்தியாவிற்கு வருகை தந்தது பிரதமர் மோடியுடனான அவரது நட்புக்கு சாட்சி. 2006-07 இல் பிரதமராக பதவியேற்ற அபே, இந்தியாவுக்கு விஜயம் செய்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அவரது இரண்டாவது பதவிக் காலத்தில், அபே மூன்று முறை இந்தியாவுக்கு விஜயம் செய்தார். ஜனவரி 2014 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பின் பேரில், பின்னர் இரண்டு முறை டிசம்பர் 2015 மற்றும் செப்டம்பர் 2017 இல் பிரதமர் மோடியுடனான அவரது உறவு ஆழமடைந்தது.

இதையும் படிங்க: பாப்புலர் பிரண்ட் முக்கிய தலைகள் கைது.. தே.பா ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை.

pm modi visit japan to attend shinzo abes funeral nn sep 27

2015 ஆம் ஆண்டு தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி, வாரணாசியில் கங்கா ஆரத்தியைக் காண பிரதமர் அபேவுக்கு இந்திய கலாச்சாரத்தின் காட்சிகளை வழங்கினார். பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் வாரணாசிக்கு விமானத்தில் ஒன்றாகச் சென்றனர். இரு நாட்டு தலைவர்களும் வாரணாசியில் உள்ள தசாஷ்வமேத் காட் என்ற இடத்தில் சூரிய அஸ்தமனம் செய்யும் கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் டோக்கியோவில் உள்ள நிப்பான் புடோக்கனில் நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில், பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். அந்த வகையில் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார். ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கிட்டத்தட்ட 6,400 பேர் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios