nobel prize announcement for 3 peopele for physics

2017 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உடலின் புவி ஈர்ப்பு விசை அலைகள் குறித்த ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு என இன்று அறிவிப்பு வெளியானது. இதில், ஸ்வீடனை சேர்ந்த ரெய்னர் வெய்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பாரி சி.பாரிஷ், கிப் எஸ். தார்ன் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிகோ என்ற புவி ஈர்ப்பு கருவி மூலம் அலைகலை கண்டறிந்தமைக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஜ்பாஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.