Asianet News TamilAsianet News Tamil

40 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 23,51,430 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. 

more than 40 lakh people in world were affected by corona
Author
USA, First Published May 9, 2020, 7:48 AM IST

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் தற்போது உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2,76,215 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 40,12,769 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 13,85,124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

more than 40 lakh people in world were affected by corona
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 23,51,430 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் கொடூரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ்,  ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

more than 40 lakh people in world were affected by corona

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரையில் 13,21,785 பேருக்கு வைரஸ் பரவி 78,615 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 31,241 பேரும், இத்தாலியில் 30,201 பேரும் ஸ்பெயினில் 26,299 பேரும் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றுவரை 59,695 மக்கள் வைரஸ் பாதிப்படைந்து 1,985 பேர் பலியாகி உள்ளனர். பிற நாடுகளிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா எனும் கொடிய நோயால் நிலைகுலைந்து போயுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios