2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பேரழிவு நிகழ்வுகள் குறித்து டைம் ட்ராவலர் ஒருவர் கணித்துள்ளார். சூறாவளி, உள்நாட்டுப் போர், வேற்றுகிரகவாசி வருகை, புயல், பிரம்மாண்ட கடல் உயிரினம் என பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்திற்கு பயணித்ததாகக் கூறும் ஒருவர் 2025 ஆம் ஆண்டு நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து கணித்துள்ளார்.. தன்னைத்தானே டைம் ட்ராவலர் என்று கூறிக் கொள்ளும் எல்விஸ் தாம்சன், ஜனவரி 1 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் 2025 ஆம் ஆண்டில் ஐந்து குறிப்பிட்ட தேதிகள், பேரழிவு நிகழ்வுகள் நிகழும் என்று அவர் கூறியுள்ளார்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வீடியோவில், ஏப்ரல் 6 ஆம் தேதி, மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்துடன் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி அமெரிக்காவின் ஓக்லஹோமாவை பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தாம்சன் கணித்துள்ளார்.

மேலும், மே 27 ஆம் தேதி, இரண்டாவது அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும், இது டெக்சாஸ் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும், அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட உலகளாவிய மோதலைத் தூண்டும் என்றும், இறுதியில் அமெரிக்காவை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய ஓர்ஃபிஷ்! பூமிக்கு அடுத்த பேரழிவா?

செப்டம்பர் 1 ஆம் தேதி சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசி பூமிக்கு வருவார் என்றும் அவர் கூறியுள்ளார். சாம்பியன், 12,000 மனிதர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு கொண்டு செல்வார் என்று அவர் கூறுகிறார். பூமிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் விரோதமான வேற்றுகிரகவாசிகள் பற்றியும் அவர் எச்சரித்தார்.

எதிர்காலத்தில், செப்டம்பர் 19 அன்று அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய புயல் தாக்கும் என்று தாம்சன் கணித்தார். இறுதியாக, நவம்பர் 3 ஆம் தேதி, நீல திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரியதும், செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கடல் உயிரினம் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

துபாயின் புர்ஜ் கலீஃபாவில் உள்ள மலிவான, விலையுயர்ந்த பிளாட்டின் விலை என்ன?

தாம்சனின் வீடியோ வேகமாக வைரலாகி, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஏராளமான கருத்துகளையும் குவித்துள்ளது. எனினும் சில பார்வையாளர்கள் அவரின் கணிப்புகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்,

ஒரு பயனர் நகைச்சுவையாக தாம்சன் எதிர்காலத்தில் அடுத்த வார லாட்டரி எண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு கருத்துரையாளர் வீடியோவைச் சேமித்து வருவதாகவும், தாம்சனின் கணிப்புகள் பொய்யாக நிரூபிக்கப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.