Asianet News TamilAsianet News Tamil

லண்டன் நகர சுரங்க ரயில்.. தனியே இருந்த பெண் முன்னே சுயஇன்பம் - ஆதாரத்துடன் சிக்கிய இந்திய வம்சாவளி ஆடவர்!

London Under ground Train : லண்டன் நகரில் அநாகரிகமான செயல்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

London tube railway Indian Origin man arrested after masturbating before female passengers travelled alone ans
Author
First Published Jan 4, 2024, 9:57 PM IST

லண்டன் நகரில் செயல்பட்டு வரும் அண்டர்கிரவுண்ட் ரயில் என்பதும் சுரங்க ரயில் சேவையில், தனியாக பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணுக்கு முன்னால், சுயஇன்பத்தில் ஈடுபட்ட 43 வயது இந்திய வம்சாவளி நபர் ஒருவருக்கு இங்கிலாந்த் அரசு 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வடக்கு லண்டனில் உள்ள வெம்ப்லி என்ற இடத்தை சேர்ந்தவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த முகேஷ் ஷா, கடந்த மாதம் லண்டன் இன்னர் கிரவுன் நீதிமன்றத்தில் அவர் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக கண்டறியப்பட்டு, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் 10 ஆண்டுகளுக்கு கையெழுத்திட உத்தரவிட்டார்.

இந்த இந்திய உணவு உலகின் மிக மோசமான உணவு பட்டியலில் உள்ளது...எது தெரியுமா..??

என்ன நடந்தது?

கடந்த நவம்பர் 4, 2022 அன்று ஒரு Tube (Tube - London Underground Train Service) பயணத்தின் போது இரவு 11.40 மணியளவில் பாதிக்கப்பட்டவர் சட்பரி டவுனுக்கும் ஆக்டன் டவுனுக்கும் இடையில் காலியான ஒரு வண்டியில் தனியாகப் பயணித்தபோது, ​​ஷா அந்த ரயிலில் ஏறியுள்ளார். அந்த வண்டி முழுவதும் காலியாக இருந்தபோதும், ஷா பாதிக்கப்பட்டவருக்கு எதிரே அமர்ந்திருக்கிறார். மேலும் அவர் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அந்த பெண்ணும் உணர்ந்துள்ளார். 

அது அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய நிலையில், சட்டென்று ஷா அவர் முன்னிலையில் சுயஇன்பத்தில் ஈடுப துவங்கியுள்ளார் என்று BTP வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த பெண் தைரியமாக அங்கு நடந்ததை வீடியோ எடுத்துள்ளார். மேலும் தன்னிடமிருந்து விலகிச் செல்லவும் ஷாவை அவர் அறிவுறுத்தியுள்ளார். 

ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஷா எதிர்ப்பு தெரிவிக்க, உடனே பாதிக்கப்பட்டவர் இந்த சம்பவத்தை BTPக்கு வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ளார். பின் இந்த வழக்கு காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவர்கள் ஷாவின் அடையாளத்தை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். ஒரு சில ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இப்பொது அவருக்குள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் 8 இந்தியர்களின் கதி என்ன? 60 நாட்கள் கெடு இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios