Asianet News TamilAsianet News Tamil

'கிருஷி பாரத் மேளா'; உலகளவில் விவசாய துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் யோகி அரசு!

நவம்பர் 15 முதல் 18 வரை உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் 'கிருஷி பாரத் மேளா' நடைபெற உள்ளது. இந்த மேளாவில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம்.

Krishi bharat mela in lucknow Yogi government encourage agricultural innovations mma
Author
First Published Sep 25, 2024, 7:27 PM IST | Last Updated Sep 25, 2024, 7:27 PM IST

கிரேட்டர் நொய்டாவில், யுபி சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இதுபோன்ற நிகழ்வுகளை  அதிகம் நடத்த யோகி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் வரும் நவம்பர் மாதம்  "கிருஷி பாரத் மேளா" நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. நவம்பர் 15 முதல் 18 வரை மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற உள்ள இந்த மேளா மூலம், மாநிலத்தில் விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க உள்ளனர். சர்வதேச வர்த்தக கண்காட்சியைப் போலவே, இந்த நிகழ்வில் நெதர்லாந்து பங்குதாரர் நாடாக செயல்பட உள்ளது. 

திட்டமிட்டபடி, ''கிருஷி பாரத் மேளா'' 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடத்தப்பட உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் 10க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடத்தப்பட உள்ளன, 4000க்கும் மேற்பட்ட சுமார் 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின் மூலம் விவசாயத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோடு, விவசாயிகள் அவற்றை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு தளத்தை ஏற்படுத்த முடியும். விவசாயிகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த பிரத்யேக ஸ்டால்களும் அமைக்கப்பட உள்ளது.. இதில் விவசாய சுற்றுலா, நிலைத்தன்மை மண்டலம், விவசாய நலன் மண்டலம், இளம் விவசாயிகள் மண்டலம் ஆகியவை இடம்பெற உள்ளது .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios