சிங்கப்பூர் நாட்டின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது

நிலவின் ஆராய்ச்சிக்காக சந்திரயான்3 வின்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூர் நாட்டின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு PSLV-C56 ராக்கெட் மூலம் DS-SAR செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அந்த செயற்கைக்கோளுடன் இணைந்து வேறு 6 செயற்கைக்கோள்களும் விண்ணிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. சிங்கப்பூர் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான DSTA மற்றும் எஸ்.டி இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் DS-SAR செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.. மூன்று ஆண்டுகள் கழித்து Green Signal கொடுத்த சீனா - முழு விவரம்!

இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்ததும், சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்காக செயற்கைக்கோள் புகைப்படத் தேவைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிகிறது. தங்கள் வணிக வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல், உயர்ரக படங்கள், ஜியோஸ்பேஷியல் சேவைகளுக்கு இந்த செயற்கைக்கோளை ST இன்ஜினியரிங் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

DS-SAR செயற்கைக்கோளில் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய ரேடார் உள்ளது. அனைத்து வகையான வானிலை, பகல், இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். மேலும் முழு துருவமுனைப்பில் ஒரு மீட்டர் தெளிவுத்திறனில் இமேஜிங் செய்யும் திறன் கொண்டது.

Scroll to load tweet…

விண்வெளித் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், 360 கிலோ எடையுள்ள DS-SAR செயற்கைக்கோளை அனுப்புவதற்கு PSLV-C56 ராக்கெட்டை வாங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. PSLV-C56 ஆனது C55ஐப் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

DS-SAR செயற்கைக்கோளுடன் இணைந்து VELOX-AM, ARCADE, SCOOB-II, NuLoN, Galassia-2, ORB-12 STRIDER ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.