Asianet News TamilAsianet News Tamil

ஜப்பான், தென்கொரியா நாட்டவர்கள் இந்தியா வர தடை...!! கொரோனா எதிரொலியால் அதிரடி நடவடிக்கை...!!

கொரோனா நோய்த் தாக்கத்தை தொடர்ந்து ஜப்பான் தென் கொரியா நாட்டு பயணிகளும் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது . ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது . 

India ban to  'Korean's and japan's to enter to India by corona reaction
Author
Delhi, First Published Feb 28, 2020, 1:14 PM IST

கொரோனா நோய்த் தாக்கத்தை தொடர்ந்து ஜப்பான் தென் கொரியா நாட்டு பயணிகளும் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது . ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  சீனா முழுவதும்  பரவியுள்ளது .  சினா மட்டுமல்லாது உலக நாடுகளையும் இது அச்சுறுத்தி வருகிறது .

India ban to  'Korean's and japan's to enter to India by corona reaction 

ஒரு கட்டத்தில் இந்த வைரஸ்  சர்வதேச அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது . கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரையில் சீனாவில் மட்டும் சுமார் 2858 பேர் உயிரிழந்தனர் ,  சுமார் 78,000 அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதற்கான புள்ளிவிவரங்களை சீனா சுகாதார தேசிய ஆணையம் அறிவித்துள்ளது .  இந்த வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள  ஈராட் இத்தாலி  தென்கொரியாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தென்கொரியாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது .  தென் கொரியாவில் இந்த வைரசுக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல் ஜப்பானிலும் கொரோனா  வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது .  இதுவரையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

India ban to  'Korean's and japan's to enter to India by corona reaction

அதுமட்டுமல்லாமல் இத்தாலியிலும் இந்த  வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது .  தென் கொரியா மற்றும் ஜப்பான்  நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .  இருநாடுகளிளும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால்  இரு நாட்டினருக்கும் விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய உள்துறை  அமைச்சகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது .  மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்களையும்  மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios