Asianet News TamilAsianet News Tamil

வீரியம் குறைந்ததால் வெளியே வந்த ஜி ஜின்பிங்...!! கொரோனா தோன்றிய இடத்திற்கே போய் சீன் போட்ட சீன அதிபர்..!!

வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி  ஜி ஜின்பிங்  ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ,  வுகானில்  ஆய்வு மேற்கொண்டுள்ளார் .  அங்கு  கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அவர் ஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது . 

china president xi jin ping  visit first time ukhan town at china after 3 month affect corona
Author
Delhi, First Published Mar 10, 2020, 12:03 PM IST

கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் செய்துள்ளார் . வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி மறைவான இடத்தில் இருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் முதல்முறையாக வுகானில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது .  அதுமட்டுமல்லாமல் ஜப்பான் ,  தென் கொரியா ,  ஈரான் ,  உள்ளிட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது .  சீனாவில் இதன் வீரியம் குறைந்ததாக சொல்லப்படும் நிலையில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது . 

china president xi jin ping  visit first time ukhan town at china after 3 month affect corona

இந்த வைரஸின் ஆரம்ப புள்ளியான சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டும்  கொரோனா தோன்றிய வுகான் நகரில் இன்னமும் உயிர் பலிகள் குறைந்தபாடில்லை.   இது சீனாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது .  இந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வைரஸ் வீரியம் குறைந்தாலும் கூடுதலாக 17 பேர் பலியானதை அடுத்து  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை சுமார் 80 ஆயிரத்து 558 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  என தெரிவிக்க தெரிவித்துள்ளது .  சீனாவைத் தொடர்ந்து இத்தாலி அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது .  இதுதவிர ஈரான் ,  தென்கொரியா ,  அமெரிக்கா , ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் .  

china president xi jin ping  visit first time ukhan town at china after 3 month affect corona

உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு  பலியானவர்கள் எண்ணிக்கை 4011 ஆக அதிகரித்துள்ளது .  அது மட்டுமல்லாமல் ,  உலக அளவில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  சீனாவில் கொரோனா உருவான வுகான் நகருக்கு அந்நாட்டின அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் .  வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி  ஜி ஜின்பிங்  ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ,  வுகானில்  ஆய்வு மேற்கொண்டுள்ளார் .  அங்கு  கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அவர் ஆய்வுக்கு சென்றதாக  கூறப்படுகிறது .  அதேபோல் மக்களை நேரில் சந்தித்து அவர் அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .  வைரஸ் தாக்கம் தொடங்கி கடந்த மூன்று மாதங்கள் ஆன நிலையில் அவர் வுகான் நகருக்கு வருவது இதுவே முதல் முறையாகும் .

Follow Us:
Download App:
  • android
  • ios