வெறும் 2 மணி நேரத்தில் 2,300 கி.மீ தூரம் பயணம் : இன்று தொடங்கியது அதிவேக ரயில்பயண சேவை!
இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்கும் அதிவேக ரயில் சேவை சீனாவில் இன்று தொடங்கியது.
சீனாவின் தென்மேற்கு பகுதியான Guiyang மற்றும் Kunming ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. Shanghai-Kunming என்ற இரயில், 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும் அதிவேக திறன் கொண்டது. இதன் முதல் பயணம் Yunnan ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி Guiyang ரயில் நிலையத்தில் முடிவடையும். பயணதூரத்தை அதிவேகமாக இந்த ரயில் கடந்து செல்வது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.