Asianet News TamilAsianet News Tamil

முதன் முதலில் கொரோனாவை கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் லி ...!! மனம் வருந்தி மன்னிப்பு கேட்டது சீனா..!!

இந்நிலையில் சீனாவில் இதனுடைய தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் உயிரிழந்த மருத்துவர் லி, யிடம்  தற்போது சீனா மன்னிப்பு  கேட்டுள்ளது .  இது குறித்து வூக்கன்  போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china
Author
Delhi, First Published Mar 20, 2020, 4:58 PM IST

கொரோனாவை  முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த  மருத்துவர் லீ யிடம்  சீனா  தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளது .  அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு இருந்தால் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டோம் என சீனா மன வருத்தம் தெரிவித்துள்ளது .  சீனாவின் வூக்கன் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது .  மத்திய வூக்கன் நகரின் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் லி ,  கடந்த டிசம்பர் மாதம் 30ஆம்  தேதி மருத்துவமனைக்கு வந்த  நோயாளியை பரிசோதித்தார்  அவர், அந்த நபருக்கு  சார்ஸ் வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்தார்.  இதுகுறித்து சக மருத்துவர்களையும் எச்சரித்துள்ளார் . 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china

அத்துடன் மருத்துவர்களை முகக் கவசம் அணியும்படி வலியுறுத்தியுள்ளார்.  ஆனால் அப்போது யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை .  அதேநேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் மருத்துவரை சந்தித்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இப்படி பொய்  தகவல்களையும் பரப்ப மாட்டேன் எனக் கூறும்படி அவரிடமிருந்து  எழுத்துப்பூர்வமான கடிதத்தைப் பெற்று சென்றனர் .  ஆனாலும் லி அதை  சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார் . பின்னர் கொரோனா  சீனாவில்  வேகமாக  பரவுவது கண்டறியப்பட்டது .  இந்த வைரஸ்  மிக வேகமாக பரவி மருத்துவர்  லியையும்  தாக்கியது ,  அதில் பாதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் .  தற்போது இது சீனா முழுவதும் பரவி பெரும் மனித உயிரிழப்பு ஏற்படுத்தியதுடன் .  உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china

 சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் .  இந்நிலையில் சீனாவில் இதனுடைய தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் உயிரிழந்த மருத்துவர் லி, யிடம்  தற்போது சீனா மன்னிப்பு  கேட்டுள்ளது .  இது குறித்து வூக்கன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  மருத்துவர் லீ  வென்லியாங்  எங்களுக்கு கொரோனா  குறித்து முதலில் சொன்னார் .ஆனால் அவர் பேச்சை நாங்கள் மதிக்கவில்லை ,  மறாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்தோம்,  நாங்கள் செய்தது  மிகப்பெரிய தவறு .   இதை எங்களால் மறக்க முடியாது .  அவர் சொன்னபோதே  நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும் .  அப்படி செய்திருந்தால் வைரஸ் பரவலை தடுத்திருக்க முடியும் .   இவ்வளவு பேர் பலியாகி இருக்கமாட்டார்கள் .  மக்களுக்காக  உயிரிழந்த லீ வென்லியாங்கிடமும் அவரது குடும்பத்தினரிடமும்  பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம் .  லி மீதான வழக்கை வாபஸ் செய்கிறோம் என தெரிவித்துள்ளது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios