கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

தானும் மனைவியும் பிரிய உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், "பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரிந்து செல்லும் முடிவை எடுத்துள்ளோம்" என்று கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், 48 வயதான அவரது மனைவி சோஃபி கிரெகோயர்-ட்ரூடோவும் பிரிவதாக புதன்கிழமை அறிவித்தார். அவரது அலுவலகத்தின் அறிக்கையில், தம்பதியினர் சட்டப்பூர்வ பிரிவினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

"அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள்" என்றும், பெற்றோர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அவர்களையும் அவர்களது மூன்று குழந்தைகளையும் ஒன்றாகப் பார்ப்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ஆகிய இருவரும் 2005 இல் மாண்ட்ரீலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சேவியர், 15, எல்லா கிரேஸ், 14, மற்றும் ஒன்பது வயது ஹாட்ரியன் ஆவார்கள்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!