Singapore Bird Flu : H5N1 இன்ஃப்ளூயன்ஸாவின் அதிகரிக்கப்பல், பாதிக்கப்பட்ட நாடுகளில் பல பிராந்தியங்களில் இருந்து பெறப்படும் கோழி மற்றும் கோழி சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் H5N1 என்று அறியப்படும் பறவை காய்ச்சல் வழக்குகள் அதிகம் இருப்பதாக கருதப்படும் இடங்களில் இருந்து இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது சிங்கப்பூர். இந்த இடங்களில் நான்கு ஜப்பானிய மாகாணங்கள் - சாகா, இபராக்கி, சைதாமா மற்றும் ககோஷிமா ஆகியவை அடங்கும். அத்துடன் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியின் பல பகுதிகளும் அடங்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இறைச்சி மற்றும் முட்டை வியாபாரிகளுக்கு டிசம்பர் 8 தேதியிட்ட அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சலின் அதிகரிப்பால் இந்த தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகக் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது. 

"AI வைரஸை செயலிழக்கச் செய்வதற்கான உலக விலங்கு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க வெப்ப-சிகிச்சையளிக்கப்பட்ட கோழிப் பொருட்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாது" என்று ஜப்பானிய இறக்குமதிக்கான சுற்றறிக்கை கூறுகிறது. வெப்ப-சிகிச்சையளிக்கப்பட்ட கோழி என்பது பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற பொருட்களைக் குறிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் பறவைகளை கொன்று குவித்த பறவை காய்ச்சல், பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் ஐரோப்பாவில் தாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கம்போடியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள பண்ணைகளிலும் இது சமீபத்தில் கண்டறியப்பட்டது. 

ஜப்பானிய ஊடகமான NHK வெளியிட்ட செய்தியில், கடந்த நவம்பர் மாதம் சாகா மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசாங்கம் பாதிக்கப்பட்ட பண்ணையில் சுமார் 40,000 பறவைகளை அழிக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.