சிங்கப்பூரில் காதை கடித்த குற்றத்திற்காக 37 வயதான இந்தியர் ஒருவருக்கு  ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த மனோகர் சங்கர் என்பவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவர் சிராங்கூன்சாலையில்அமைந்துள்ளதொழிலாளர்கள்குடியிருப்பில்வசித்துவந்தார். 47 வயதானமற்றொரு இந்தியரும் அதேகுடியிருப்பில்வசித்துவந்தார்கடந்த 2020-ம் ஆண்டு மே 19, 2020 அன்றுஇரவு, மனோகர்அடுக்குமாடிகுடியிருப்பில் மாடியில் மதுஅருந்தி கொண்டிருந்தார் என்றும், அப்போது அருகில் இருந்த நபரை திடீரென வசைபாட தொடங்கி உள்ளார். இதனால்மனமுடைந்தஅந்தநபர், மனோகரைதிட்டுவதைநிறுத்துமாறுகூறியுள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் போட்ட ட்வீட்.. பிரதமர் மோடியின் பதில் என்ன?

ஆனால் அதை பொருட்படுத்தாத மனோகர், பின்நாற்காலியில்அமர்ந்திருந்தநபரை காதை கடித்துள்ளார். அப்போதுபாதிக்கப்பட்டநபர்எழுந்துநின்றுமனோகரின்பிடியில்இருந்துவிடுபடமுயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில்கீழேவிழுந்தமனோகருக்கும்காலில்காயம்ஏற்பட்டது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து, சண்டையை விலக்கி உள்ளனர். அவர்களில்ஒருவர்பாதிக்கப்பட்டவருக்குமுதலுதவிஅளித்தார். குடிபோதையில்இருந்ததால்மனோகர்அப்படியேதரையில்கிடந்துள்ளார்மனோகர் கடித்ததால் பாதிக்கப்பட்டவரின்இடதுகாதுமடலில் 2 செமீநீளமுள்ள பகுதியை கடித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்அடுத்தநாள்செங்காங்பொதுமருத்துவமனையின்அவசரசிகிச்சைப்பிரிவுக்குச்சென்றார். பின்னர் மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்ச்சை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில், மனோகருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனோகருக்கு 1,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மனோகர் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு