Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாதிகளிடமே தீவிரவாதத்தை ஒழிக்க ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா..!! தாலிபன்களிடம் டோட்டலாக சரண்டரான ட்ரம்ப்..!!

என்னென்ன செய்யப் போகிறோம் என அவர்கள்   உறுதியளித்துள்ளார்களோ அதை செய்வார்கள் என  நம்புகிறேன் ,  தீவிரவாதிகளை இனி அவர்கள் அழைப்பார்கள்.  மிகமோசமான சிலரை  அவர்கள் கொல்வார்கள் .  சண்டையை அவர்கள் தொடங்குவார்கள் .

american president trump  handover with thalibans and relationship with terrorist
Author
Delhi, First Published Mar 2, 2020, 1:11 PM IST

தாலிபன் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டர்ம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் . ஆப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் நடத்தி வந்த நிலையில் ,  தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது .  தாலிபன்கள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ள நிலையில் அமெரிக்க  அதிபர் இம்முடிவை எடுத்துள்ளார் . கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது .  தாலிபன்களி டமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டு மக்களாட்சி மலர அமெரிக்கா  உதவி செய்தது .  கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நோட்டோ படைகள்  பாதுகாப்பு பணியில்  இருந்து வருகிறது.   

american president trump  handover with thalibans and relationship with terrorist

இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற அமெரிக்க அதிபர் முடிவு  செய்துள்ளார் .  சுமுகமான முறையில் அதை செய்வதற்கு தாலிபான் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் முடிவு செய்தார் .  அதன்படி கத்தார் நாட்டின்  தோகாவில் அமெரிக்கா மற்றும்  தாலிபன்  பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது .  இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொண்டார் .  இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது . இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது.  இவ் ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளரை சந்தித்து அதிபர் ட்ரம்ப் ,  தாலிபன் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திக்க உள்ளேன் என்றார்.

american president trump  handover with thalibans and relationship with terrorist

 என்னென்ன செய்யப் போகிறோம் என அவர்கள்   உறுதியளித்துள்ளார்களோ அதை செய்வார்கள் என  நம்புகிறேன் ,  தீவிரவாதிகளை இனி அவர்கள் அழைப்பார்கள்.  மிகமோசமான சிலரை  அவர்கள் கொல்வார்கள் .  சண்டையை அவர்கள் தொடங்குவார்கள் .  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதில் ஆப்கனிஸ்தானில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம் .  இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் வீரர்களை திரும்ப பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது .  ஆப்கானிஸ்தானில் உள்ள 13,000 அமெரிக்க வீரர்களிற் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைக்க உள்ளோம்.   சிரியா ,  ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்ன் ஆதிக்கத்தை 100% ஒடுக்கிவிட்டோம் .  இதில் ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நடந்ததைப் போலவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை  கொன்றுள்ளோம்.   ஆனால் இப்போது அந்த பணியை வேறு யாராவது செய்ய வேண்டிய நேரமிது .  அது தாலிபன்களாகவும் சுற்றியுள்ள நாடுகளாகவும் இருக்கலாம் .  ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகள் உதவ தயாராக உள்ளன என  ட்ரம்ப் கூறினார் .

 

Follow Us:
Download App:
  • android
  • ios