Asianet News TamilAsianet News Tamil

இந்திய நண்பனுக்கு சீனா அனுப்பிய தரமான கருவிகள்..!! விமானத்தில் வந்திறங்கிய 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்.!!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு நாடுகளுக்கு உபகரணங்களை  அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .   
 
6.5 lakhs rapid kits cane from china  , after noon reached Delhi
Author
Delhi, First Published Apr 16, 2020, 4:13 PM IST
சீனாவிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அதிவிரைவு பரிசோதனை கருவிகள் இன்று சீனாவிலிருந்து  இந்தியா வந்தடைந்தது . கொரோனா பரிசோதனைக்காக மொத்தம் முப்பது லட்சத்துக்கும் அதிகமான கருவிகளை  சீனாவிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் , தற்போது முதல்கட்டமாக 6.5 லட்சம் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளது .  இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது , அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால்  உடனே வைரஸ் பரிசோதனைகளை அதிகபடுத்தி  சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்ன நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன .  இந்நிலையில் ஆன்டிபாடி சோதனைகள் மற்றும் ஆர்என்ஏ பிரித்தெடுத்தல் கருவிகள் உட்பட  மொத்தம் முப்பது லட்சத்துக்கும் அதிகமான கருவிகளை இந்தியா சீனாவிடம் ஆர்டர் செய்தது . 

6.5 lakhs rapid kits cane from china  , after noon reached Delhi

இந்நிலையில் இந்த கருவிகள்  கடந்த வாரமே இந்தியாவின் கைக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ,  அதில் தாமதம் ஏற்பட்டது ,  இந்தியாவிற்கு அனுப்ப வேண்டிய  கருவிகளை சீனா , அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின , இந்நிலையில்  ஒரு வார கால தாமதத்துக்குப் பின்னர் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனை கருவிகள்  குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று அதிகாலை  அனுப்பப்பட்டுள்ளதாக  சீனாவுக்கான இந்திய தூதர் மிஸ்ரி தெரிவித்துள்ளார் ,  கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டதையடுத்து  சுமார்  இரண்டு மாதத்துக்கு பின்னர் சீனாவில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன .  இந்நிலையில் பல்வேறு நாடுகளுக்கு சீனா முகக் கவசங்கள் ,  வென்டிலேட்டர்கள்,  ஆன்டிபாடி சோதனை கருவிகள் போன்றவற்றை  உற்பத்தி செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது .  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளது . 
6.5 lakhs rapid kits cane from china  , after noon reached Delhi

இதற்கிடையில் நாட்டில் 12 , 380 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது ,  சுமார்,   414 பேர் உயிரிழந்துள்ளனர் ,  இந்நிலையில் இந்தியாவுக்கு பரிசோதனை கருவிகளின்  தேவைகள் அதிகரித்துள்ளதால் ,  சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை  சீனாவிடமிருந்து காலதாமதமின்றி  பெறுவதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது,  இந்நிலையில் தற்போது மருத்து உபகரண பொருட்கள்  சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ,  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லாவோ லிஜியன்,    இந்தியாவின் அவசரத் தேவையை உணர்ந்து , இந்தியாவுக்கு தேவையான மருத்துவ கருவிகள் அனுப்பி வைக்கப்படுகிறது, சரியான நேரத்தில் பொருட்கள் அனுப்பி இருப்பது,   இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு நாடுகளுக்கு உபகரணங்களை  அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .

6.5 lakhs rapid kits cane from china  , after noon reached Delhi  

உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தரமான பொருட்கள்  இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என லாவோ லிஜியன் தெரிவித்துள்ளார் . ஐரோப்பிய நாடுகள் வைத்த புகாரின் அடிப்படையில்  தரமான பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை சீனா எடுத்துவிடுகிறது .  அதாவது கள்ளச் சந்தைகளில் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்  என அவர் தெரிவித்துள்ளார் . எனவே சுமார் 6.5 லட்சம் மருத்துவ பரிசோதனைக்  கருவிகளுடன்  சீனாவின் குவாங்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானம் ,  பிற்பகல் டெல்லி வந்தடைந்தது. விரைவில்  பொருட்கள் அனைத்தும் மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அடுத்த 15 நாட்களில் மேலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை கருவிகள் சீனா அனுப்பிவைக்கும் என சீனாவுக்கான இந்திய தூதர் கூறியுள்ளார் . 
 
Follow Us:
Download App:
  • android
  • ios