Asianet News TamilAsianet News Tamil

கண்ணிமைக்கும் நேரத்தில் 30 ராணுவ வீரர்கள் துடிதுடித்து இறந்தனர்...!! 10 பேர் உயிருக்கு போராட்டம்..!!

இந்நிலையில் திரிபோலியில் உள்ள ராணுவ பள்ளி மீது இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது .  
 

30 army person's died by rebel's mass attack in army school's at Libya
Author
Delhi, First Published Jan 6, 2020, 1:04 PM IST

லிபியாவில் உள்ள ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர் . சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  லிபியாவில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவரும்,  சர்வாதிகாரி எனப்பட்டவருமான  மும்மர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார் .   வறுமை ,  வேலைவாய்ப்பின்மை காரணங்களால் நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரில் இறங்கினர் .

30 army person's died by rebel's mass attack in army school's at Libya

இந்நிலையில்   அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது ,  உங்களை என் முன்னாள் ராணுவ தளபதி  கலிப்பா கப்தார் தலைமையலானோர் லிபியா தேசிய இடைக்காலப் பேரவையில் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் .   இந்நிலையில் கலிப்பாக தலைமையிலான குழு தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் திரிபோலியில் உள்ள ராணுவ பள்ளி மீது இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது .  

30 army person's died by rebel's mass attack in army school's at Libya

இதில் ராணுவப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 30 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் சுமார்  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .  படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . சிகிச்சையில் உள்ளவர்களுக்கு   ரத்த தானம் செய்யும்படி சுகாதாரத்துறை நாட்டுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது .   ஆனாலும் தாக்குதல் சம்பவத்திற்கு கப்தார் படையினர் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios