பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தரம் கெட்ட விளையாட்டு விளையாடி வருவதாக நடிகர் கமல்ஹாசன் சாடி இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ள நிலையில், அவர்கள் இரு அணிகளாக பிரிந்து தற்போது போட்டி போட்டு வருவதால் தற்போது ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதிலும் சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே நடந்த வாக்குவாதம் தான் இந்த வாரம் ஹாட் டாப்பிக் ஆக அமைந்தது.

அந்த வாக்குவாதத்தில் வினுஷா விஷயத்தை அர்ச்சனா இழுத்ததால் கடுப்பான நிக்சன், இனி வினுஷா பற்றி யாராவது பேசினால் சொருகீருவேன் என மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சால் கோபமடைந்த அர்ச்சனா, இந்த வாரம் உரிமைக் குரல் எழுப்ப உள்ளதாக கூறி இருக்கிறார். இதனால் நிக்சனுக்கு ரெட் கார்டு கிடைக்குமா என்கிற பேச்சும் எழத் தொடங்கி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று கமல்ஹாசன் வந்த இந்த பிரச்சனை குறித்து விசாரிக்கும் முன் அவர்கள் விளையாடும் விதத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதில் கமல் கூறியதாவது : “ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவித்துக்கொண்டிருக்கும் விஷயம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள்.

வெளியே தண்ணீர் வடிந்ததும் தரை தெரியும். இவங்க மூழ்கியிருக்கும் விளையாட்டு முடிஞ்சா தரம் தெரியாது. தரமில்லாம தான் விளையாடிட்டு இருக்காங்க. அந்த தர விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று இரவு விசாரிப்போம்” என கோபத்துடன் அவர் பேசி இருப்பதால் இன்றைக்கு செம்ம சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் இப்படி ஆகிடுச்சே... மீண்டும் தீவிர சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்..?