கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண் கற்பழித்து கொலை!
கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண் ஒருவரை கற்பழித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலையில்,ஆலம்பற கோட்டை அருகே ஜாகீரா என்ற இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இதனை பார்த்த நபர் ஒருவர்,காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீசார் விசாரணையில், இந்த பெண் தனியாக அங்கு வந்தாரா? அல்லது நண்பர்களுடன் வந்தாரா ? குற்றவாளிகள் யார் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடன் அந்த பெண்ணின் பேக்,செருப்பு,ஆடை அனைத்தும் சிதறிய வண்ணம் உள்ளது.இதனை பார்க்கும் போது கல்லூரி மாணவியாக இருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது