திருத்தணி அருகே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பட்டாபிராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பார்த்திபன். இவரது மனைவி தனலட்சுமி .

தனலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேல்முருக்கம்பட்டு கிராமத்தில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தனலட்சுமி நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஏரியில் தலையில் காயத்துடன் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.