Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இந்தெந்த பகுதிகளில் இன்று மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

Will Continuously Moderate rain 4 days in Tamil Nadu - Today Weather Report
Author
First Published Sep 17, 2022, 1:39 PM IST

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல ஒழடுக்கு சுழற்கு காரணமாக,

17.09.2022 முதல்‌ 19.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

 20.09.2022 மற்றும்‌ 21.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:இனி சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது.. சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.09.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

20.09.2022 மற்றும்‌ 21.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர் வேகத்டுல்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.. எவ்வாறு பதிவு செய்வது..? விவரம் இங்கே

Follow Us:
Download App:
  • android
  • ios