பீட்டாவுக்கு சொம்படிக்கும் வழக்கறிஞர் இவர் தான் .....!!! ஜல்லிக்கட்டு கசக்குதாம், பீட்டா இனிக்குதாம் ..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமின்றி, உலகில் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்கள் கூட ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் வாழும் இந்திய வழக்கறிஞர் ஒருவர் , பீட்டாவுக்கு பிரியமா நடந்துக்கொள்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க உச்சநேதிமண்டரத்தில் தடை வாங்கியது பீட்டா . பின்பு இளைஞர்களின் போராட்டம் தொடங்கவே, ஒரு கட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து, மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது.

நிரந்தர சட்டம் :

தமிழக சட்ட மன்ற கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர சட்டம் இயற்ற ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.

பீட்டாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் :

இந்நிலையில், மீண்டும் பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்கி, பீட்டா தரப்பில் ஆஜாராகிறார்.இது குறித்து பேசிய அபிஷேக் சிங்கி, பீட்டாவிற்கு ஆதரவாக களமிறங்குவது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.