who are all going for jayalalithaa samaathi that person may lost their rol
தமிழகத்தை பொறுத்தவரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல மாற்றங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் அரசியல் திருப்பங்கள் என பல நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று வணங்கினால், ஏதாவது ஒன்றை பறிகொடுத்து விடுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது . அதற்கேற்றார் போல்,
பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்த பின்னர் அவரது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் பறிகொடுத்தார்.
சசிகலாவும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கிய பின், பெங்களூரு சிறைக்கு சென்றார்.
தினகரன் ஜெயலலிதாவின் சமாதியை வணங்கிய பின், அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தையும் இழந்தார், அதிமுக என்ற கட்சி பெயரை கூட பயன்படுத்தகூடாத நிலை ஏற்பட்டுள்ளது
இதே போன்று ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா தன் அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று வணங்கிய பின் தன் கணவர் மாதவனை பிரிந்தார் . இது போன்று ஒவ்வொருவரும், தங்களுடைய பதவியையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றோ இழக்க நேரிடுகிறது என பரவலாகவே மக்கள் பேசிவருகிறார்கள் .
இது போன்ற கருத்துக்களை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? ஜெயலிதாவின் ஆத்மா தான் இப்படி செய்ய வைக்கிறதோ என்னமோ என சிலர் கருத்து கூறி வருகின்றனர் .
