என்ன செய்கிறது பீட்டா ? “அடிப்பட்டு வலியில் உள்ளது இந்த மாடு “ காப்பாத்த வேண்டியதுதானே ...?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்து என கூறி , உச்சநீதிமன்றத்தில் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கியது பீட்டா அமைப்பு. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் பீட்டாவிற்கு எதிராக கோஷங்களும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டங்களும் தொடர்ந்து வலுத்து வருகிறது .

பீட்டா அமைப்பு உண்மையில் விலங்கினங்களுக்கு பாதுகாப்பாக தான் இருக்கிறது என்றால், தற்போது, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காலில் காயத்துடன் ஒரு மாடு சில நாட்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறது. அந்த மாட்டின் உரிமையாளரும், அந்த மாட்டை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

இந்நிலையில் காலில் அடிபட்டு மிகுந்த சிரத்துடன் சுற்றி வருகிறது. ஆதரவற்று காயத்துடன் சுற்றி திரியும் அந்த மாட்டினை பீட்டா அமைப்பினர் காப்பாற்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதுதானே என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் .

இதையெல்லாம் செய்யாத பீட்டா அமைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதா? என மக்கள் தங்கள் நேர்மை குரலை உயர்த்தி உள்ளனர்