we need mercy killing. pettion to coimbatote collector

மூதாட்டிகள் இருவர் தங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் யாருமே இல்லை என்றும், எங்கள் இருவரையும் கருணை கொலை செய்துவிடுங்கள் என கண்ணிர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தனர். மனதை உருக்கும் இந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் தனது முதல் மனைவி பழனியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் மற்றொரு பழனியம்மாள் என்பரை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், நடராஜ் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது 101 வயதாகும் பழனியம்மாவும், 70 வயதாகும் மற்றொரு பழனியம்மாவும் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

மேலும் அவர்கள் இருவரும் தள்ளாத வயதில் முதியோருக்கான தள்ளுவண்டியில் வந்து கலெக்டரிடம் தங்களது பிரச்சனையை கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். இதையடுத்து அந்த மூதாடிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் கலெட்ர் அலுவலத்துக்கு வந்திருந்தவர்களை நெகிழச் செய்தது.