Asianet News TamilAsianet News Tamil

கொடநாடு கொலை வழக்கு - மேலும் 2 பேர் கேரளாவில் கைது

two arrested in kerala in kodanadu murder case
two arrested-in-kerala-in-kodanadu-murder-case
Author
First Published Apr 30, 2017, 3:21 PM IST


கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

two arrested-in-kerala-in-kodanadu-murder-case

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேரை போலீசார் தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேரை கேரள மாநிலத்தை சேர்ந்த நிலம்பூர், அரியகோட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios