trasgender fircefully made a passenger to fell down from train and died
ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட திருநங்கை..காசு கொடுக்காததால் போனது பயணியின் உயிர்..!
ரயிலில் திருநங்கைகள்,பயணியிடம் காசு கேட்டு பெறுவது வழக்கமான ஒன்று தான்.
சில பயணிகள் காசு கொடுப்பார்கள்,சில பயணிகள் காசு தர மாட்டார்கள்,அவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ளும் திருநங்கைகளும் உள்ளனர் அடாவடியாக பேசி, இரண்டு அடி கொடுத்து காசு பறிக்கும் திரு நங்கைகளும் உள்ளனர்
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி என்ற ஊரை ரயில் கடக்கும் போது, பயணி ஒருவர் காசு கேட்டு தர மறுத்ததால் திருநங்கைகள் ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த சத்தியநாராயணா.இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் காட்பாடி மார்க்கத்தில் ரயில் ஏறி உள்ளார்.திருப்பூர் செல்ல இருந்த இந்த இளைஞரை மேலோகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் திரு நங்கைகள்.
சத்யாநாராயணாவை காப்பாற்ற முற்பட்ட அவருடைய நண்பர்களும் காயம் அடைந்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
