தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்
அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று சமூக வலைதளங்களில் சில விஷமிகள் புரளியைக் கிளப்பினர். ஆனால், அவை அனைத்தும் வீண் வதந்திகள் அதை நம்ப வேண்டாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நாளை வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் ்அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதாவும் 5.12.2016(இன்று) பள்ளிகள் வழக்கம் போல் தமிழகம் முழுவதும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் கீழ் வரும் கல்லூரிகளில் இன்று நடக்க இருக்கும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் வழக்கம் போல் நடக்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.
