தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப
சலனம்‌ காரணமாக,

27.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

28.04.2022. 29.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்ச மலைப் பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, ஈரோடு மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌
மிதமான மழை பெய்யக்கூடும்‌.

30.04.2022: தென்‌ தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகுரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

01.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌):
(சிவலோகம்‌ கன்னியாகுமரி) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.