Tamilnadu Rains : தமிழ்நாட்டுக்கு இன்று மிக முக்கிய நாள்… அப்படியா..? என்ன விஷயம்…?
இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய நாளாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.ஏரிகள்,குளங்கள்,ஆறுகள் என பல்வேறு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் பொதுவாக தமிழகம் முழுவதுமே, இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.அதில், ‘அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது. இதனால் உள் தமிழகம், மேற்கு தமிழகம், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும். கடந்த 2 நாட்களை விட சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளது மேலும் இன்று இரவு மேகங்கள் எப்படி உருவாகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.மன்னார் வளைகுடாவில் சுழல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு பெய்த மழை என்பது எதிர்பார்த்த அளவிலேயே இருந்தது.
https://www.facebook.com/photo/?fbid=460218678804182&set=pb.100044481604368.-2207520000..
பெரிய அளவில் இது பொதுமக்களின் துயரங்களை அதிகரிக்கவில்லை. நாம் பயந்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மழை மேகங்கள் இன்று சென்னையை நெருங்கி மேலே நகர உள்ளது, இதனால் சென்னையில் இன்றும் மழை பெய்யும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யலாம். ஆனால், மொத்தமாக மழை மேகங்கள் சென்னைக்கு மேல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னை மக்கள் அச்ச்சப்படதேவையில்லை.
டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது. அதோடு இன்றும் கடலூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தற்காலிக சூழல் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று இரவும், நாளை காலையும் கனமழையை எதிர்பார்க்கலாம்.தூத்துக்குடி - நெல்லை - தென்காசி மாவட்டங்களிலும், குமரியில் சில இடங்களிலும் கனமழை பெய்யும். மேலும் எதாவது அப்டேட் இருந்தால் கூறுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.