to go toilet need to pay the bill rs 11 with gst in perunthudai
டாய்லெட் செல்ல ஜிஎஸ்டி...! பெருந்துறையில் முதல் முறையாக...
மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்கள் மக்களுக்கு நன்மை தருகிறது.ஆனாலும் அதிலும் எப்படி எல்லாம் குறுக்கு வழி என யோசிப்பவர்கள், பொருளின் விலையை அதிகரித்து அதற்கேற்றவாறு ஜிஎஸ்டி போட்டுக்கொள்கிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் தான் என்பதால்,ஜிஎஸ்டி யால் இப்படி பிரச்சனை என பலரும் தவறாக புரிந்துக்கொண்ட செயல்படுகின்றனர்.

இந்நிலையில்,ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள,ருக்மணி அம்மாள் புட்ஸ்,சேலம் பை பாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் இந்த ஓட்டலில் உணவருந்திவிட்டு, ரெஸ்ட் ரூம் பயன்படுத்திய ஒருவருக்கு ஜிஎஸ்டி உடன் பில் போட்டு, 11ரூபாய்கான பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்வு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி மதியம் நடைபெற்று உள்ளது.
இந்த பில் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
