காவல்துறை அதிகாரிகளுக்கான நடைமுறையில் சட்ட விதிகளைல் புதிய சட்டதிருத்தத்தை தமிழக அரசு செய்துள்ளது.அதன்படி,மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்யகூடாது என தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கான நடைமுறையில் சட்ட விதிகளைல் புதிய சட்டதிருத்தத்தை தமிழக அரசு செய்துள்ளது.அதன்படி,மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் தேவையின்றி போலீசார் தொந்தரவு செய்யகூடாது என தமிழக காவல்துறையில் புதிய நடத்தை விதி சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் செல்போன் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணை என்கிற பெயரில் திருநங்கைக்கு போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கை உமாஸ்ரீ (30). இவர் தன்னுடைய செல்போன் தொலைந்து விட்டதாக பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்புகார் அளித்த திருநங்கை உமாஸ்ரீ இல்லத்திற்கு சென்ற காவலர் மூவேந்தன் வேல்பாரி விசாரணை மேற்கொண்டார்.
விசரணையின்போது உமாஸ்ரீயிடம் காவலர் மூவேந்தன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த காவலர் மூவேந்தன் வேல்பாரி குடிபோதையில் இருந்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசியதுடன் பாலியல் தொல்லை அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீ பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட பந்தயசாலை காவல் நிலைய போலிசார் காவலர் மூவேந்தன் வேல்பாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகள் தொடர்பான நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை காவல்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக காவல்துறையில் புதிய விதி சேர்க்கப்பட்டிருப்பது திருநங்கைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
