தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலக்ருஷ்ணா ரெட்டிக்கு முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமருடனான சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ள நிலையில் நல்லது நடக்கும் என முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம்தெரிவித்தார் 

மேலும் சந்திப்பு முடித்து இன்று மதியமே சென்னை திரும்புவதாக ஓபிஎஸ் திட்ட மிட்டிருந்தார் ஆனால் தனது ஊர் திரும்பும் பயணத்தை திடீரென ரத்தும்செய்தார்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடுத்து தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் 

இந்தநிலையில் தமிழக கால்நடை துறை அமைச்சரான பாலகிருஷ்ணா ரெட்டி யை உடனடியாக கிளம்பி டெல்லி வருமாறு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார் 

இதனையடுத்து அமைச்சர் டெல்லி கிளம்பி சென்றார் நாளை மதியம் சுற்றுசூழல் துறை அமைச்சரை சந்திக்கவும் மற்ற சட்ட நடவடிக்கைகளை அடுத்தகட்டதுக்கு எடுத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யயும் உள்ளதாக தெரிகிறது