Asianet News TamilAsianet News Tamil

511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்!

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 511  முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

TN Govt says employement for 92000 youth through Rural Development Department smp
Author
First Published May 29, 2024, 5:36 PM IST | Last Updated May 29, 2024, 5:36 PM IST

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 511  முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் பணியமர்வு திட்டத்தின் கீழ் இந்த வேலைவய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை  உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 இலட்சம் என்பது ரூ.5 இலட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் என்பது ரூ.25 இலட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 இலட்சம் என்பது ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சுய வேலை வாய்ப்பு தனிநபர் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 21,190 தனி நபர்களுக்கு ரூபாய் 117.00 கோடியும்,   12,503 குழுக்களுக்கு ரூபாய் 428.82 கோடியும் வட்டி மான்யத்துடன் கூடிய வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புரங்களில் செயல்படும் 1,29,630 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 5,266.21 கோடி வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புரங்களில் செயல்படும் 3,34,763 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 23,675.15 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து விசாரிக்க சிறப்பு குழு: பிரதமர் மோடி!

45,150 நகர்ப்புர ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மக்கு நாமே திட்டம் (ஊரகம்), பெரியார் நினைவு சமத்துவபுரம், ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மீண்டும்  உத்தமர் காந்தி விருது, ஜல் ஜீவன் திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios