500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எந்த வித திட்டமிடுலும் இல்லாமல் 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த மத்தியரசினை கண்டித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும்சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எந்த வித திட்டமிடுலும் இல்லாமல் 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த மத்தியரசினை கண்டித்தும், அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும், கிராமப்புற பொதுமக்கள்,விவசாய மக்கள் நலனை கருத்தில் கொண்டு மைக்ரோ ஏ.டி.எம் அல்லது மொபைல் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த வேண்டும், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் பணிகளை விரைந்து முடித்த பேருந்து நிலையத்தினை திறக்க வேண்டும், கடலைக்கார தெரு சந்திப்பில் இருந்த கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிப்பிடத்தை உடனடியாக அமைக்க வேண்டும், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை தற்காலிமாக பணிமாறுதல் செய்ய கூடாது, போதிய மருத்துவர்கள் மற்றும் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையில் கம்ப்யூட்டர்கள் சரிவார இயங்கவில்லை என்பதால் அதற்கு தனி இணைப்பு வழங்க வேண்டும், கோவில்பட்டியில் உள்ள பகுதி நேர போக்குவரத்து அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தி அறிவித்த நிலையில் எவ்வித செயல்பாடும் இல்லமால் இருப்பதை செயல்பட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர்விடுதி முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கறுப்புத்துணிகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர். நகர தலைவர் ராஜகோபால், மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.வேலுச்சாமி, வட்டார தலைவர்கள் இமானுவேல், ஆழ்வார்சாமி, நகர்மன்ற உறுப்பினர்தவமணி, நகர துணை தலைவர் காளிப்பாண்டியன், ஐயனார்ஊத்து ஊராட்சி மன்ற தலைவர் சந்தணபண்டி, மாவட்ட துணை தலைவர்கள் செல்லப்பாண்டியன், ரசாக்,பாலகிருஷ்ணன், முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட தொண்டரணி தளவாய்சாமி, மாணவர் அணி செயலாளர் மாரிமுத்துராமலிங்கம், மாநில இளைஞரணி செயலாளர் கனி, நகர துணை தலைவர் வீரபுத்திரன், நகர செயலாளர் செண்பகராஜ், பொது செயலாளர் சுப்புராஜ், சிறுபான்மை பிரிவு வின்சென்ட், மதன், ஜோஷ்வாஞானசிங், நகர செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன, சரவணன், பாட்சா,வெங்கடேஷ், ராஜமாணிக்கம், ஐ.என்.டி.யூ.சிசெயலாளர் ராஜகோபாலன், பால்ராஜ், சண்முகசுந்தர ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
