Asianet News TamilAsianet News Tamil

அசால்ட் நடவடிக்கையே... அஞ்ச வேண்டாம் - புஸ்வானமாக்கிய டிஜிபி...!

tk rajendran said this is a normel progress
tk rajendran said this is a normel progress
Author
First Published Sep 26, 2017, 4:29 PM IST


சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடைமுறையே எனவும், இது ஒரு வழக்கமான நிகழ்வு தான், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் டிஜிபி டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பொதுவாகவே, பரபரப்பான அரசியல் சூழ்நிலைநிலவும் போது, எந்த சூழ்நிலையையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். 

தமிழ்நாட்டில் உள்ள19 சிறப்பு காவல் படைக்கும் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகமே பெரும் பரபரப்பில் காணப்பட்டது. 

ஏன் இந்த திடீர்உத்தரவு என பலரும் குழம்பி வந்தனர். பொதுவாகவே முக்கிய சமபவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் தான் இது போன்ற ஒரு  அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடைமுறையே எனவும், இது ஒரு வழக்கமான நிகழ்வு தான், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் டிஜிபி டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios