Asianet News TamilAsianet News Tamil

தொடரும் கனமழை ! திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை !!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அசியிவ்வக்கட்டுள்ளது.

tiruppur  schools are today leave due to heavy rain
Author
Tiruppur, First Published Aug 9, 2019, 6:50 AM IST

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுத் அதன்  சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக  தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது, இதையடுத்து , திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tiruppur  schools are today leave due to heavy rain

ஏற்கனவே கோவை , நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருப்பூரிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tiruppur  schools are today leave due to heavy rain

கோவை மாவட்டத்திலும்  கடந்த திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் சென்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios