அழகென்று சொல்லுக்கு முருகா…! திருச்செந்தூர் கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நடை நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும்.
அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டு உள்ள உத்தரவுப்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.