Asianet News TamilAsianet News Tamil

அழகென்று சொல்லுக்கு முருகா…! திருச்செந்தூர் கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Thiruchendhur murugan temple open
Author
Thiruchendur, First Published Sep 22, 2021, 8:55 PM IST

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

Thiruchendhur murugan temple open

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நடை நாளை  அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும்.

அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டு உள்ள உத்தரவுப்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios