ஆசிரியையின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துவிட்டு கீழே தள்ளிய திருடர்கள்... இரண்டாக முறிந்த கால்....
திருடர்கள் கழுத்தில் இருந்த செயினை அறுத்துவிட்டு கீழே தள்ளியபோது ஆசிரியையின் கால் முறிந்து விட்டது.
மலையடிப்பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் இன்று காலை பள்ளிக்கு செல்லும்போது, மஞ்சம்பட்டி கிராமம் அருகே திருடர்கள் ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை அறுத்துவிட்டு அவரை கீழே தள்ளியபோது ஆசிரியையின் கால் முறிந்து விட்டது.
கால்கள் இரண்டாக முறிந்த நிலையில் அவரை அங்கு இருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தங்க சங்கிலியை அறுத்து சென்ற திருடர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.