தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை அக்டோபர்‌ 29 ஆம்‌ தேதி ஒட்டி துவங்கக்கூடும்‌ என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று தமிழக கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக

27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

28.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி,
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல்‌, சிவகங்கை, இராமநாதபுரம்‌, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை.. இந்தாண்டு அதிக புயல்கள்.. மிரட்டும் வடகிழக்கு பருவமழை

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தென் மணடல் வானிலை ஆய்வு மைய தலைவர் பால சந்திரன், வட இந்திய பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த 23 ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின் வங்கக்கடலில் உருவான சிட்ராங் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து கடந்த சில தினங்களுக்கு வங்கதேசத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை உருவாக கால தாமதம் ஆகியுள்ளது. வரும் அக்.29 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உருவாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் நவம்பர் 4 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். அதன் பிறகு மழைப்பொழிவு படிபடியாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க:நயன்தாரா வாடகை தாய் விவகாரம்..! பழைய சட்ட விதியே பின்பற்றப்பட்டுள்ளது- மா.சுப்பிரமணியன்