Asianet News TamilAsianet News Tamil

ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜூப் ஓட்டுனர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

Tamilnadu Government jobs recruitment notification 2022
Author
First Published Nov 5, 2022, 4:00 PM IST

நிறுவனம்: தமிழக அரசு 

காலி பணியிடங்கள்: 1

பணியின் பெயர்: ஜீப் ஓட்டுனர்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையாக சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ( ரேஷன் கார்டு, ஆதார், சாதி சான்றிதழ்,

 அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( வளர்ச்சி பிரிவு),
மதுரை - 20

மேலும் படிக்க:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் காலி பணியிடங்கள்.. 44,000 சம்பளம்.. முழு விவரம்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 18- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்கியினருக்கு 18 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பத்துடன், தகுதியான ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். 

நிபந்தனை: 

மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் இதர படிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுவர். 

மேலும் படிக்க: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..

 

Follow Us:
Download App:
  • android
  • ios