Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Tamil Nadu fishermen 8 people arrested
Author
Tamil Nadu, First Published Dec 17, 2018, 10:00 AM IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று அதிகாலையில், தமிழக மீனவர்கள் 8 பேர்  படகில் மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே இன்று அதிகாலையில், அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை படையினர், அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

 Tamil Nadu fishermen 8 people arrested

பின்னர், அவர்களை கைது செய்த இலங்கை படையினர், படகுகளையும் பறிமுதல் செய்து காரை நகர் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், 8 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios