ஜல்லிக்கட்டில் இறங்கிய 2 கில்லி காளை....! டிஆரும், எஸ்டி ஆரும் கலக்கல் பேட்டி.....!!!
ஜல்லிக்கட்டில் இறங்கிய 2 கில்லி காளை....! டிஆரும், எஸ்டி ஆரும் கலக்கல் பேட்டி.....!!!
பொங்கல் திருநாள் நெருங்குவதை யடுத்து, ஜல்லிகட்டுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்டுவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் , ஜல்லிகட்டு நடத்த வேண்டுமேன ஆங்காங்கு ஆதரவு குரல் கொடுத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து தன் ஆதரவை வெளிபடுத்தும் விதமாக , சும்மா கில்லியாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சிம்பு .....
தமிழர்கள் என்ன அநாதைகளா..?
கேட்க யாரும் இல்லை என நினைச்சிட்டு இருக்கீங்களா?
வற்புறுத்தி பெறப்படும் மாட்டின் பாலை குடித்துவிட்டு , ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதா ? என தொடர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சிம்பு
அவரை தொடர்ந்து, தன் மகன் சிம்புவுக்கும் , ஜல்லிகட்டுக்கும் ,ஆதரவை தெரிவித்தார் டி ராஜேந்தர்
தன் மகனும் நடிகருமான சிம்பு , ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்ததையும் , நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து , மவுன போராட்டம் நடத்துவதாக அறிவித்ததற்கும் , தன் ஆதரவை தெரிவித்துள்ளார் டி ராஜேந்தர்