son suicide due to his father death
உடல்நலக் குறைவால் தன் இறந்த அதிர்ச்சியில் தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 26 ஆம் தேதி போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தந்தை உயிரிழந்ததை அடுத்து மிக சோகத்தில் இருந்த அவரது மகன் பிரேம் குமார், மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர்.எம்.சி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
