Asianet News TamilAsianet News Tamil

திக் திக் ..! ECR ரோட்டில் கத்தி முனையில் காருக்குள்ளே கற்பழிக்கப்படும் பெண்கள்..! பிடிபட்ட டிரைவர் பகீர்...!

வேலை முடிந்து ECR ரோட்டில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களை கடத்தி கத்தி  முனையில் கற்பழிக்கப்பட்டு, பின்னர் அவர்களிடமிருந்த நகைகளை பறிக்கும் கும்பல் பிடிபட்டு உள்ளது 
 

shocking news that ladies raped who walk alone in ecr road
Author
Tamil Nadu, First Published Aug 15, 2018, 5:43 PM IST

ECR ரோட்டில் பெண்களை காரில் கடத்தி...கத்தி முனையில் கற்பழிப்பு....பிடிபட்ட டிரைவர் பகீர்...! 

வேலை முடிந்து ECR ரோட்டில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களை கடத்தி கத்தி முனையில் கற்பழிக்கப்பட்டு, பின்னர் அவர்களிடமிருந்த நகைகளை பறிக்கும் கும்பல் பிடிபட்டு உள்ளது 

சென்னையில், ECR என சொல்லப்படும் கிழக்கு கடற்கரை சாலையில், தனியாக செல்லும் பெண்களை சில கும்பல் நோட்டமிடுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. பின்னர் சில பெண்களை கடத்தி நகைகளை பறித்து சென்றதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் புகார் அளித்து உள்ளார்.

shocking news that ladies raped who walk alone in ecr road

இதனை விசாரித்த நீலாங்கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் பெண் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இது குறித்த தீவிர விசாரணையில் இறங்கினர்.

பெண் அளித்த புகார் படி,

"தனியாக நடந்து செல்லும் போது திடீரென வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் கடத்தி  காருக்குள்ளேயே வைத்து பலாத்காரம் செய்தார்" என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார். இந்த பெண் அந்த காரின் நம்பரை மனப்பாடம் செய்து, போலீசில் தெரிவிக்கவே, உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், டிரைவர் சுரேசை பிடித்து உள்ளனர்.

டிரைவர் சுரேஷ் கூறியது, 

அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் திருமணமான பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் நைசாக பேசி காரில் ஏற்றி இறங்கும் இடம் வருவதற்குள் ஆள் நடமாட்டம்  இல்லாத இடமாக பார்த்து நிறுத்தி, கத்தி முனையில் அவர்களை மிரட்டி சத்தம் போடாமல் இருக்க செய்வேன்...பின்னர் காரிலேயே உல்லாசமாக இருப்பேன்.

இதுவரை இந்த ஆண்டு மட்டுமே குறைந்தபட்சம் 10 பேரையாவது இப்படி கற்பழித்து இருப்பேன் என தெரிவித்து உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios